முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
இலங்கை
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் (BOI) முன்னாள் பணிப்பாளர் ஜெனரல் ஜெயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக இன்று (30) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், இரண்டு நபர்களும் அரசாங்கத்திற்கு ரூ.1.7 மில்லியனுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவியேற்பின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்பட்ட செய்தித்தாள் விளம்பரங்களுக்கு முதலீட்டு சபையின் நிதியைப் பயன்படுத்தியது தொடர்பானது வழக்கில் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகைகள் முறையாக சமர்ப்பிக்கப்பட்டன.
குற்றப்பத்திரிகைகள் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கப்பட்டது.























