பெண்ணுடன் தங்கியிருந்த பௌத்த பிக்கு - சுற்றிவளைத்த காவல்துறையினர்
இலங்கை
சுற்றிவளைப்பொன்றின் போது விடுதியில் பெண்ணொருவருடன் தங்கியிருந்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தியத்தலாவ பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் வைத்தே குறித்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணொருவர் மாற்றுப்பெயருடன் விடுதிக்கு வந்துள்ளதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த பிக்கு பொரலந்த பிரதேசத்தில் உள்ள ஒரு விகாரையைச் சேர்ந்த 45 வயதானவர் எனவும் பிக்குவுடன் இருந்த பெண் அதே பகுதியில் வசிக்கும் திருமணமான 40 வயதானவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.