• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தரமற்ற அரசி விநியோகம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்

இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்காக விநியோகம் செய்யப்பட்ட அரசி தரமற்றது என்ற குற்றச்சாட்டு தற்போது தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தரமற்ற அரசியை விநியோகம் செய்துள்ளமை தொடர்பாக அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என இன்றைய நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியிருந்தார்.

இது குறித்து  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  தெரிவித்துள்ளதாவது ”அரசாங்கம் மக்களுக்கு வழங்கியுள்ள தரமற்ற அரிசி தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். நாட்டின் சில பகுதிகளுக்கு வழங்கப்பட்ட அரிசி தரமற்றவை. ஏப்ரல் மாதம் தொடக்கம் அரிசி வழங்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

எதிர்க்கட்சியாக இருந்தாலும் இந்த திட்டத்தை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் விநியோகிக்கும் நடைமுறையில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. சில இடங்களில் தரமற்ற அரிசி விநியோகம் நடக்கிறது. அவ்வாறானதொரு சம்பவம் ஹலிலெல பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றும் ராஜித கீர்த்தி தென்னகோன் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அரிசியின் தரத்தினை கட்டாயம் ஆராயவேண்டும் ஏனெனில் இவை நம் நாட்டு மக்களுக்கு வழங்கப்படுகின்றது” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply