• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சம்பள உயர்வு கோரி மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்

இலங்கை

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று அமைதிவழிப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்கள் இன்று மதியம் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைதி வழி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

சம்பள உயர்வு, மேலதிக நேர கொடுப்பனவு, பதில் கடமை, காகிதாகி செலவுகள் உள்ளடங்களாக பல்வேறு கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்வதில் பல வருடங்களாக நீடித்து வருகின்ற இழுபறி நிலையை உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறு கோரியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

11 வருடங்களுக்கு மேலாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் இதுவரை பிரச்சினைகள் தீர்க்கப்பட வில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a Reply