• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் புதிய CT ஸ்கேனர் இயந்திரம்

இலங்கை

காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் 250 மில்லியன் ரூபா பெறுமதியில் புதிதாக நிறுவப்பட்ட CT ஸ்கேனர் சிகிச்சைச் சேவையில் சேர்க்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் இடம்பெற்றது.

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட இந்த அதிநவீன CT ஸ்கேனர் இயந்திரம் சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டு வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த CT Scanner இயந்திரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறுவப்பட்டு இன்று வரை இயந்திரத்தின் செயற்பாடுகள் பரிசோதிக்கப்பட்டதோடு, இன்று முதல் நோயாளிகளின் CT ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாளொன்றுக்கு 40 முதல் 50 சி.டி ஸ்கேன் சோதனைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் எதிர்காலத்தில் அந்த வரம்பை மீறி சோதனைகளை மேற்கொள்ள முடியும் என்றும் நம்பப்படுகிறது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் ரமேஷ் பத்திரன, எதிர்வரும் வருடத்தில் வைத்தியசாலையின் பௌதீக வளங்கள் மற்றும் ஒட்டுமொத்த மருத்துவ உபகரணங்களை அபிவிருத்தி செய்வதற்கு 100 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் மருத்துவமனையில் நோயாளிகளின் நெரிசலை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply