• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் மரணித்தவர்களை நினைவு கூர்ந்து மௌன அஞ்சலி

இலங்கை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் இன்று காலை 8.45 மணி முதல் இரண்டு நிமிடங்களுக்கு மௌன அஞ்சலி  செலுத்தப்பட்டது.

இதேவேளை  கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று காலை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தலைமையில் விசேட ஆராதனை நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு, ஏப்ரல் 21 ஆம் திகதி, தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் உட்பட 8 இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 407 பேர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply