• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போதைக்கு அடிமையாகி பிணங்களைத் தேடித் திரியும் கும்பல்!

சியரா லியோன் நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சியரா லியோனில் பெரும்பாலான மக்கள் குஷ் ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், குஷ் போதைப்பொருள் மனித எலும்புகளில் இருந்து உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

கடந்த 6 வருடங்களாக இந்த குஷ் ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் புழக்கத்திலிருந்து வருகிறது.

சியரா லியோனில் இதுவரை 100 மேற்பட்ட புதைகுழிகளை இந்த கும்பல் தோண்டியுள்ளதாக அந்த நாட்டுக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் பிடியில் இருந்து மக்களை மீட்க ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சியரா லியோன் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
 

Leave a Reply