• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சொந்த தொழில் தொடங்க புதிய கனவு அலுவலகம் கட்டும் நயன்தாரா

சினிமா

தமிழ் திரை உலகில் 'லேடி சூப்பர் ஸ்டார்' நடிகையாக திகழ்ந்து வருபவர் நயன்தாரா. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை நயன்தாரா கொச்சியில் ஒரு கடை முன் நள்ளிரவில் சாலையோரமாக நின்றபடி 'ஐஸ்கிரீம்' சாப்பிடும் வீடியோவை சமூக வலைதளத்தில் நயன்தாரா வெளியிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் வியந்து உள்ளனர். ஏராளமான 'லைக்ஸ்', 'கமெண்ட்ஸ்கள்' குவிந்தன.

இந்நிலையில் நடிகை நயன்தாரா தற்போது நடிப்பு மட்டுமல்லாது, படத் தயாரிப்பு மற்றும் இன்னொரு பக்கம் அழகு சாதன பொருள்கள் விற்பனை நிறுவனம் ஒன்றிலும் பங்குதாரராக அவர் இருக்கிறார்

இந்நிலையில் நயன்தாரா தற்போது தீவிரமாக சுயதொழில் தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.'9 ஸ்கின்' என்ற பெயரில் 'ஸ்கின் கேர்' ப்ராடக்ட் , நாப்கின்கள் தயாரிப்பது என தொடர் பிசினஸில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தனது வீட்டு மொட்டை மாடியில் புதிய அலுவலகம் ஒன்றை திறக்க உள்ளார். இதனை தனது 'கனவு அலுவலகம்' என்று அவர் கூறியுள்ளார். தற்போது புதிய ஆபிஸ் தொடர்பான புகைப்படங்களை இணைய தளத்தில் பகிர்ந்து உள்ளார்.

இந்த அலுவலகத்தின் பெரும்பகுதி கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்களை கருப்பு & வெள்ளை நிறத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் ஒன்றில் கனவு அலுவலகம் வடிவமைப்பு பணிகளை நயன்தாரா மேற்பார்வையிடுவது போல் அமைந்து உள்ளது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

மேலும் இணையதள பதிவில் விரைவில் 'புதிய தொடக்கம்' என்று நயன்தாரா தலைப்பிட்டு இருக்கிறார்.

"எங்கள் கனவு அலுவலகம் அமைந்தது ஒரு மாயாஜாலம் போன்று இருக்கிறது. சாத்தியமில்லாத ஒன்றை 30 நாளில் சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். இதை உருவாக்கியவர்கள் சிறந்த மனிதர்கள்" என நயன் தாரா கூறியுள்ளார்.

சமூக வலை தளத்தில் இதனை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா புதிய தொழில் தொடங்கப்போகிறாரா ? அப்படி தொடங்கினால் எந்த மாதிரியான தொழிலாக அது இருக்கும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply