• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் காணி விடுவிப்பு குறித்து விசேட கலந்துரையாடல்

இலங்கை

காணி விடுவிப்பு தொடர்பில் யாழ் இராணுவ கட்டளைத் தளபதிக்கும்  யாழ் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பலாலி இராணுவ தலைமையலுவலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண இராணுவ கட்டளைத் தளபதி எம்சிபி விக்ரமசிங்கவை யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உள்ளிட்ட குழுவினர் சந்தித்து பேசினர்.

குறித்த சந்திப்பில் ஜனாதிபதியின் வடமாகாண மேலதிக செயலாளர் இளங்கோவன் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர்( காணி) கே.ஸ்ரீமோகனன், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவகங்கா சுதீஸ்னர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
 

Leave a Reply