• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டின் பிரஜைகளின் தேவைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும்-ஜூலி சாங்

இலங்கை

சர்வதேச சமூகம் மட்டுமன்றி நாட்டின் பிரஜைகளின் தேவைகளுக்கு செவிசாய்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டுமென அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் கோரிக்கை விடுத்துள்ளார்.

இணைய பாதுகாப்பு சட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்படி தவறான செயல்முறை, உள்நோக்கம் மற்றும் பேச்சு சுதந்திரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் ஆகிய மூன்று அம்சங்களில் கவனம் செலுத்தி, இணைய பாதுகாப்பு சட்டம் குறித்து அவர் தீவிர கவலைகளை வெளிப்படுத்தினார்

குறித்த சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வரையறைகள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தாக்குதல்கள் போன்ற செயல்களை எதிர்த்துப் போராடும் நோக்கத்தில் உள்ளன, ஆனால் முறையான வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்த தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கவலை தெரிவித்தார்.

மேலும் சட்டத்தை திருத்துவதற்கான செயல்முறை நடந்து கொண்டிருக்கும் வேளையில், சட்டத்தின் சாத்தியமான தாக்கம் குறித்த தீர்வுகளைக் காணுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

Leave a Reply