பாரத் – லங்கா 10000 வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்
இலங்கை
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பாரத் – லங்கா 10000 வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.
வீட்டுத் திட்டத்தின் நிர்மாணத்திற்கான உத்தியோகப்பூர்வ நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இந்த வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
10 மாவட்டங்களில் 45 பெருந்தோட்டப் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
10000 வீட்டுத் திட்டத்தில் முதற்கட்டமாக 1300 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.