• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை

இலங்கை

எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் நாட்டின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையினை நிறைவு செய்வதே அரசாங்கத்தின் இலக்கு என நிதி இராஜாங்க அமைச்சர் “ரஞ்சித் சியம்பலாபிட்டிய” தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்லயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடன் வழங்கும் நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் மார்ச் மாத இருத்திக்குள் நிறைவடையும் எனவும்  அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply