• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாரத் – லங்கா வீடமைப்புத் திட்டம் அங்குரார்ப்பணம்

இலங்கை

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 10,000 வீடமைப்புத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

நான்காவது கட்டத்தின் கீழ் பத்து மாவட்டங்களிலுள்ள 45 தோட்டங்களில் 1,300 வீடுகள் நிர்மாணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் இணைந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply