• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஓட்டல் மேலாளர்களை தாக்கிய பெண் ஊழியர்

அமெரிக்காவின் ஹார்ட்ஸ்பீல்ட்- ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்தில் ஒரு தேநீர் கடை உள்ளது. இங்கு பணியாற்றும் ஷகோரியா எல்லி என்ற பெண் ஊழியர் பணிபுரிந்து வந்துள்ளார். அவர் சக ஊழியருடன் சண்டையிட்ட புகாரில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக எல்லி தேநீர் கடை மேலாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது எனது பொருட்களை என்னிடம் கொடுங்கள் என்று கேட்டு கடையில் இருந்த 2 மேலாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் வாக்குவாதம் முற்றியதில் எல்லி, மேலாளர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆவேசம் அடைந்த எல்லி அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து மேலாளர்களில் ஒருவரை தாக்க முயன்றார். அதற்குள் அந்த மேலாளர் நாற்காலியை எல்லியின் கைகளில் இருந்து பறித்தார்.

உடனே எல்லி மீண்டும் கடைக்குள் செல்ல முயன்றார். அப்போது சிவப்பு டி-சர்ட் அணிந்த மற்றொரு மேலாளர் அவரை தடுத்த நிறுத்தினார். இதனால் ஆவேசம் அடைந்த எல்லி வாடிக்கையாளர்கள் கண் முன்பு அவரை சரமாரியாக தாக்கி விட்டு தனது கோட் மற்றும் பேக்குடன் அங்கிருந்து வெளியேறும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தினர். மோதல் தொடர்பாக முறைப்படி புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். 
 

Leave a Reply