• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் போராட்டம்

இலங்கை

சுகாதார தொழிற்சங்கங்கள் 72 இணைந்து இன்று (செவ்வாய்கிழமை) காலை 6.30 முதல் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன

வைத்தியர்களுக்கு அரசாங்கம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்க வேண்டுமென கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது

இதேவேளை அத்துடன், மருத்துவ ஆய்வக விஞ்ஞானிகள், கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள், மருந்தாளர்கள் உள்ளிட்ட பலர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் மருத்துவ சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள் இன்றைய தினமும் சிரமங்களை எதிர்கொள்வார்கள் என சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply