• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அயல்நாட்டில் இந்தியாவிற்கு புகழ் சேர்க்கும் IISc மாணவி

கர்நாடக மாநிலத்தில் உள்ளது இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science).

1991ல் கர்நாடகாவின் மங்களூர் பல்கலைக்கழகத்தில் (Mangalore University) அறிவியல் பட்டம் பெற்றவர் அஞ்சனா தேவி (55). இவர் இந்திய அறிவியல் கழகத்தில் பிஹெச்டி (Ph.D) பட்டமும் வெற்றிகரமாக படித்து முடித்தார்.

தற்போது ஜெர்மனியில் பேராசிரியராக பணியாற்றும் அஞ்சனா தேவி, அங்குள்ள ட்ரெஸ்டன் (Dresden) பகுதியில் உள்ள லெய்ப்னிஸ் மையத்தில் (Leibniz Institute) "மெட்டீரியல் கெமிஸ்ட்ரி" எனப்படும் "பொருள் வேதியியல்" துறையின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அறிவியல் கழகத்திலிருந்து ஜெர்மனியில் இத்தகைய பொறுப்பில் நியமிக்கப்படும் முதல் நபர் எனும் பெருமையை பேரா. அஞ்சனா பெற்றுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது:

அமெரிக்காவில் உள்ள சிலிக்கான் வேலியை போன்று அடுத்த சிலிக்கான் வேலியாக ஜெர்மனி உருவாகி வருகிறது. இந்திய மாணவர்களுக்கு ஜெர்மனியில் பல வாய்ப்புகள் உள்ளன. இங்கு பெரும் வளர்ச்சிக்கான சூழல் நிலவுகிறது. குறிப்பாக செமிகண்டக்டர் துறையில் முதுநிலை கல்விக்கு இங்கு வாய்ப்புகள் அளவுக்கு அதிகமாக உள்ளன. இங்குள்ள பல பல்கலைக்கழகங்கள் இந்திய பல்கலைக்கழகங்களுடன் பல்வேறு கல்வி திட்டங்களுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு வருகின்றன. இந்திய மாணவர்களுக்கு கல்வியில் தியரி (theory) எனப்படும் கோட்பாட்டு அறிவு அதிகம்; ஆனால், பிராக்டிகல் (practical) எனப்படும் செயல்முறை பயிற்சி குறைவு. ஆய்வுக்கூட அனுபவமும் உலக நாடுகளுடன் ஒப்பிட்டால் குறைவு. ஆனால், சுதந்திரமாக சிந்திக்கவும், செயல்படவும் அயல்நாட்டு பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மென்பொருள் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தாமல், ஆராய்ச்சி படிப்பிலும் இந்திய மாணவர்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என பல வருடங்களாக கல்வியாளர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply