• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திரையுலகில் எந்த நடிகருக்கு வாய்க்காத பெருமை இது

சினிமா

1980-க்கு பிறகு பிறந்தவர்களில்,ஊருக்கு ஒரு பாக்யராஜ் என பெயர் கொண்டவர்கள் இருப்பார்கள்!
திரையுலகில் எந்த நடிகருக்கு வாய்க்காத பெருமை இது!
யாராவது என் பெயர் "பாக்யராஜ்"என சொன்னால் "நீங்க 1984,85-ல் பிறந்தவரா என நாம் உறுதியாக அவரிடம் கேட்கலாம்.
ஒரு உதவி இயக்குனர் முதல் படத்திலே,தன் இயக்குனரிடம் நெருக்கமாவது திரையுலகை பொருத்தவரை இயலாத காரியம் ஆனால் இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் தன் குரு நாதர் பாரதிராஜா அவர்களிடம் தான் உதவி இயக்குனராக சேர்ந்த முதல் படத்திலேயே அவரின் நம்பிக்கையை பெற்றார்.
பாக்யராஜ் அவர்களின் வசனங்கள்,பாரதிராஜா படத்திற்கு மிகுந்த வலு சேர்த்தது!
கதாநாயகன் ஆவதற்கு எந்த முகவெட்டும் இல்லாத பாக்யராஜை தன்னுடைய "புதிய வார்ப்புகள்"படத்தில் நாயகன் ஆக்குவதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும்!
இந்த தைரியத்திற்கு அடிப்படை காரணம் பாக்ய ராஜ் அவர்கள் பாரதிராஜா அவர்களிடம்  அளப்பறிய நம்பிக்கை பெற்றதுதான்!
ஒரு பேட்டியில் நடிகர் இராஜேஷ் கூட ,"இயக்குனர் பாக்யராஜை போல ஒரு இயக்குனரை நான் சந்தித்தில்லை!எளிய மனிதர்கள் வாழ்வை,அவர்களின் உணர்வை படம் பார்ப்பவர்களுக்கு அவரை விட யாரும் அற்புதமாக கடத்திவிட முடியாது!அந்த ஏழு நாட்கள் படம் என் வாழ்வில் ஒளியேற்றிய படம்"என சொல்லி இருப்பார்.

திரையுலகை பொருத்தவரை பணமே மூலதனமாக இருக்கும் அதனால் எந்த இயக்குனரும் நாம ஒரு படம்,ரெண்டு படத்தில் செட்டில் ஆகனும் என நினைப்பார்கள்!அதனால் தனக்கு நல்ல தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும் ஆசைப்படுவார்கள். 
ஆனால் பாக்யராஜை பொருத்தவரை அவர் தன் எழுத்தை,கதையைத்தான் அதிகமாக காதலித்தார் அதனால் அவர் தன் படங்களுக்கு தயாரிப்பாளரை தேடி போகாமல் தானே எளிய மனிதர்களை தயாரிப்பாளர்களாக உருவாக்கினார்!
தன் முதல் படத்தில் அப்போது மிகப்பிரபலமாக இருந்த இளையராஜா பின்னால் போகாமல்,அப்போது இசையில் வளர்ந்து கொண்டு இருந்த இயக்குனர் கங்கை அமரன் அவர்களை இசையமைக்க வைத்து "சுவரில்லா சித்திரங்கள்"படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றி படமாக்கினார்.
அவரின் கணிப்பின்படியே கங்கை அமரன் இசையில் பாடல்கள் அனைத்தும் செம ஹிட்.பின் இவர்கள் கூட்டணி"மௌன கீதங்கள்"படத்தில் கூட சொல்லி அடித்தது!
நீங்கள் இவர் படங்களை கூர்ந்து கவனித்தால் இவரின் படங்களின் தயாரிப்பாளரோ,நடிகையோ,இசையமைப்பாளரோ அந்த நேர மார்க்கெட்டில் உச்சத்தில் இருப்பவர்களாக இருக்க மாட்டார்கள்.
இருந்தாலும் தன்னுடைய அசாத்திய திரைக்கதை மூலம் படத்தை சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்கி விடுவார்."முந்தானை முடிச்சு"படத்தில் கூட பாக்யராஜ் அவர்களின் பேவரிட்டான கங்கை அமரன்தான் புக்கானார்.ஏவிஎம் நிறுவனத்தின் வேண்டுகோளுக்கிணங்க இசையமைப்பாளர் ஆக பிறகு இளையராஜா ஆனார்.
தமிழில் ஒரு இயக்குனர் ஒரு படத்தை இயக்கி வெற்றிப்பெற்றால் அந்த படம் ரீமேக்காக தெலுங்கு,கன்னடம் என ஒரு சுத்து சுத்தி வரும் ஆனால் எவ்வளவோ மற்றவர்கள் வற்புறுத்தியும் மாற்று மொழியில் அவர் படத்தை இயக்க விரும்பவில்லை! 
ஒரு பேட்டியில் கூட,"என்னத்தை ஒரே படத்த திரும்பி!திரும்பி எடுத்துக்கிட்டு அந்த நேரத்துல இன்னொரு படத்தை உருவாக்கி விடுவேன்"என காரணத்தை சொல்லி இருப்பார்.
இவர் படங்களில் பிரமாண்டமோ,வெளிநாட்டு படப் பிடிப்போ இருக்காது ஆனால் எளிய மனிதர்களின் வாழ்வியலை அவர்களை உணர்வுகளை பார்வையாளனுக்கு கடத்தி அசாத்திய வெற்றி பெற்றவர்.
"ஏய்யா!எப்ப பார்த்தாலும் என் பெயரையே சொல்ல மாட்டேங்கிறே! எங்க டைரக்டர்!எங்க டைரக்டர் என சொல்லுற"என இவரின் குரு நாதர் பாரதிராஜா செல்லமாக கடிந்து கொண்ட போதும்,இன்னமும் எங்க டைரக்டர் என சொல்லி உன்னதமான குரு பக்தியை காட்டுபவர்.
வாழ்வில் அதி உச்ச வெற்றியும்,வாழ்வில் சில பின்னடைவுகளையும் சந்தித்தவர்.வாழ்வில் எல்லா வெற்றியாளனுக்கு வரக்கூடிய, பின்னடைவு தான்!மீண்டும் வெற்றியை நோக்கி பயணப்பட ஆரம்பித்து இருக்கிறார்!
இயக்குனர் பாக்யராஜ் பாசாங்கற்ற எளிய மனம் கொண்ட நல்ல மனிதர்!
இன்று அவருக்கு பிறந்த நாள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சார்!நீடுழி வாழ்க!!
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

Leave a Reply