• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கை

இந்த வருடத்தின் முதல் 04 நாட்களில் மாத்திரம் 25,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள்  நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை அதிகளவான சுற்றுலான பயணிகளான  5,060 பேர், ரஷ்யாவிலிருந்து வந்துள்ளதுடன் 3,333 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.

மேலும்  கடந்த ஆண்டில் மட்டும் 14 லட்சத்து எண்பத்து ஏழாயிரத்து முன்னூற்று மூன்று சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதுடன், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 23 லட்சமாக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave a Reply