விஜயகாந்த் இறுதி ஊர்வலம், முதல்வரின் அரசியல் மாண்பிற்கு நன்றி - கமல்ஹாசன்
சினிமா
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா 'கலைஞர் 100' என்ற பெயரில் சென்னை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் திரளான பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த விழாவில் அமைச்சர்கள் உதயநிதி, ரஜினி காந்த், கமல்ஹாசன், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்சியில் , மிசா காட்சிகளை கலைஞராக தம்பி ராமையாவும், ஸ்டாலினாக விதார்த்தும் நடித்த காட்சிகளை கண்டு, முதலமைச்சர் ஸ்டாலின் கண் கலங்கினார்.
இந்நிகழ்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், கலைஞரையும் தமிழையும், கலைஞரையும் சினிமாவையும், கலைஞரையும் அரசியலையும் பிரிக்க முடியாது. சிறுவயதில் என்னுடைய அக்காக்கள் எனக்கு தலை சீவி விடும்போது கலைஞர் மாதிரி நடு வகுடு எடுத்து சீவி விடுங்கள் என்பேன். எனது நண்பர் விஜயகாந்த் அவர்களின் இறுதி ஊர்வலத்தை சிறப்பாக நடத்திக் கொடுத்த அரசியல் பண்பிற்கு முதல்வருக்கு நன்றி என தெரிவித்தார்
தொடர்ந்து பேசிய நடிகர் சூர்யா, அரசியலில் பல மாற்றங்கள் கொண்டுவந்த போது சினிமாவையும் ஒருசேர கொண்டுவந்தவர் கலைஞர் என கூறினார். "பராசக்தி படத்தில் நீ வேணும் என்றால் ஆட்சிக்கு வந்து மாத்திகாட்டேன் என எழுதி இருப்பார். அதேபோல் முதலமைச்சராக அமர்ந்து தான் எழுதியதை செய்துகாட்டியவர் கலைஞர்" என நடிகர் சூர்யா புகழாரம் சூட்டினார்.