• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடுவானில் பறந்தபோது திடீரென திறந்த கதவு - அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

அலாஸ்கா விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் "737-9 MAX" விமானம் போர்ட்லேண்டில் இருந்து ஒண்டாரியோவுக்கு (கலிபோர்னியா) 171 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்களுடன் புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் நடுப்பக்கத்தில் உள்ள வெளியேறும் கதவு திடீரென திறந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த பயங்கரமான காட்சியை சில பயணிகள் செல்போனில் பதிவு செய்தனர்.

இதுகுறித்து விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டதும், அவர் உடனடியாக விமானத்தை போர்ட்லேண்டில் அவசரமாக தரையிறக்கினார். இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
 

Leave a Reply