நான் மலேசியா சென்றால் என்னைத் தரையில் இறங்கவிடாத தங்கம்
சினிமா
டத்தோஸ்ரீ சரவணன்
மலேசிய முன்னாள் அமைச்சர்
இந்நாள்
நாடாளுமன்ற உறுப்பினர்
மலேசிய இந்தியரிடையே
சொல்வாக்கும் செல்வாக்கும்
மிக்க சுந்தரன்
நான் மலேசியா சென்றால்
என்னைத் தரையில்
இறங்கவிடாத தங்கம்
என்னையும் என் தமிழையும்
ஆவலோடு காவல்காக்கும்
சிங்கம்
மகா கவிதை
பெறுவதற்காகவே
பெருங்காதலோடு
பெசன்ட் நகர் வந்தார்
தேநீர் வருமுன்னே
சில பக்கங்கள் படித்து
ஓங்கிய குரலெடுத்து ஓதினார்
உவப்பத் தலைக்கூடி
உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்
#மகாகவிதை | #MakaKavithai
-வைரமுத்து