• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அன்னை சிவத்தமிழ் செல்வியின் 99வது பிறந்தநாள் அறக்கொடை விழா

இலங்கை

எதிர்வரும் 07.01.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தான அன்னபூரணி மண்டபத்தில் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த அறக்கொடை விழாவில் ஐந்து பெருந்தகைகள் #சிவத்தமிழ் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
பேராசிரியர் சி. சிவலிங்கராஜா, 

வைத்திய கலாநிதி. சி. அருளானந்தம், இளைப்பாறிய விரிவுரையாளர் திருமதி நாச்சியார் செல்வநாயகம், 
நாதஸ்வர வித்துவான் இ.கேதீஸ்வரன்,
இளைப்பாறிய அதிபர் மு.அருணாசலம் ஆகியோர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
நன்றி
துர்க்கா தேவி தேவஸ்தானம்,
தெல்லிப்பழை.
 

Leave a Reply