வைத்தியசாலைக்கு 100 கோடி ரூபா நன்கொடை - இலங்கை தொழிலதிபரின் நெகிழ்ச்சியான செயல்
இலங்கை
இலங்கையின் பிரபல தொழிலதிபர் நஹில் விஜேசூரிய, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு ஒரு பில்லியன் (நூறு கோடி) ரூபா நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் லிட்டில் ஹார்ட்ஸ் திட்டத்துக்கே குறித்த நிதி அவரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நஹில் விஜேசூரிய, தனியார் துறையில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகின்றார்.
மேலும் இவர், வெலிகம பிரதேசத்தின் முன்னாள் மாநகராட்சித் தலைவர் ரெஹான் ஜெயவிக்ரமவின் மாமனாரும் ஆவார்.