• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தாமதமான அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகள் ஆறு மாதங்களுக்குள்

இலங்கை

தாமதமான அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகள் ஆறு மாதங்களுக்குள் வழங்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக தொற்றுநோய் சோதனைக்கு தேவையான இரசாயனங்களை இறக்குமதி செய்வதில் ஏற்பட்ட சிரமங்களால் இந்த தாமதம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.

தொற்றுநோயைத் தொடர்ந்து இரசாயனத்தின் விலை கடுமையாக உயர்ந்ததால், சோதனை நடத்துவதற்கு சுமார் 20,000 ரூபாய் செலவாகியதாக அமைச்சர் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கூறினார்.

தாமதமாகிவரும் சோதனைகளை அடுத்த 6மாதங்களுக்குள் முடிக்க வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்றும் அதன் பின்னர் குறிப்பிட்ட மாதத்திற்குள் சோதனைகள் முடிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply