• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிப்போம் – மஹிந்த உறுதி

இலங்கை

அடுத்தாண்டு இடம்பெறவுள்ள தேர்தல்களில் வெற்றிப்பெற்று பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிப்போம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் பதவியை வகிப்பதற்கும், எதிரணி பக்கம் செல்வதற்குமான நிலைமை தமக்கு ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் தரப்பினர் தம்முடன் மீண்டும் ஒன்றிணையலாம் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தம்மீது சேறு பூசும் மற்றும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகவும் இவற்றை புரிந்துகொண்டு மக்களில் தெளிவுடன் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தலாக காணப்படும் போதைப்பொருள் ஒழிப்புக்காக முன்னெடுக்கப்படும் விசேட சுற்றிவளைப்புகள் வரவேற்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply