தத்துவம் தந்த உத்தமர் பிறந்தநாள் - கவிஞர் வைரமுத்து பதிவு
சினிமா
கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில், நள்ளிரவு முதல் சிறப்பு வழிபாடு, பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்துவ மக்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், கவிஞர் வைரமுத்து இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சகிப்புத்தன்மை
சகமனிதனை மதித்தல்
தன்னுயிர் போலவே
மண்ணுயிர் பேணுதல்
என்பனவெல்லாம்
நீதி மொழிகள் அல்ல;
ஏசு பெருமான்
வாழ்ந்து காட்டிய
வாழ்வியல் நெறிகள்
இதையும் படியுங்கள்: இப்படிதான்பா எடுத்தோம்.. ட்ரெண்டாகும் சலார் மேக்கிங் வீடியோ
இந்த நெறிகளை
மதம் சார்ந்தும் வாழலாம்;
மதம் கடந்து
மனம் சார்ந்தும் வாழலாம்
தத்துவம் தந்த
உத்தமர் பிறந்தநாள்
வாழ்த்திக்கொள்ள மட்டுமல்ல
வாழ்வதற்கும்
இவ்வாறு தனது வாழ்த்து செய்தியில் வைரமுத்து கூறியுள்ளார்.