• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 1000 க்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை

இலங்கை

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பொது மன்னிப்பின் கீழ் நாடளாவிய ரீதியில் 1004  சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர் என  சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாதுகாப்பு போதுமானதாக இல்லாவிட்டால் பொதுமக்கள்  011 247 27 57 என்ற விசேட இலக்கத்தின் ஊடாக பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply