அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கும் அமெரிக்கா
அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான என்.எஸ்.என்.812-ஐ உருவாக்கும் பணியில் அமெரிக்காவில் கடற்படை ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, இதற்கு தேவையான பொருட்களை பெறுவதற்காக ஜெனரல் டைனமிக்ஸ் எலக்ட்ரிக் போட் கார்பரேசனுடன் சுமார் ரூ.441 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் அமெரிக்க கடற்படை கையெழுத்திட்டுள்ளது. மேலும் குறித்த பணி 2033ம் ஆண்டுக்குள் முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.