• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒருமுறை பாலசந்தரிடம் பத்திரிகையாளர் ஒருவர் ஒரு கேள்வியை கேட்டார்

சினிமா

ஒருமுறை பாலசந்தரிடம் பத்திரிகையாளர் ஒருவர் ரஜினி, கமலிடம் நீங்கள் கண்டு வியந்த விஷயங்கள் பல இருக்கும். ஆனால் அவர்களின் குருவான உங்களுக்கு, அவர்களிடம் பிடிக்காத விஷயம் என்ன ? என்ற கேள்வியை கேட்டார்.

இதற்கு பாலசந்தர் என்ன பதில் சொல்லப்போகிறார் என்ற ஆர்வம் அரங்கத்தில் இருந்த அனைவரிடமும் தொற்றிக்கொண்டது. ஏனெனில் ரஜினி, கமல் என இருவரையும் பிரித்து பார்க்காதவர் பாலசந்தர். 

அந்த பத்திரிகையாளரின் கேள்விக்கு பாலசந்தர் இப்படி பதிலளித்தார், "நான் இயக்கிய 'நூற்றுக்கு நூறு' படம் பார்த்திருப்பீர்கள். அதில் எல்லோருமே ஜெய்சங்கரை பெண் சபலம் உள்ளவராக பழி சொல்லுவார்கள். அவரைக் காதலிக்கும் லட்சுமியும் அதை நம்ப ஆரம்பித்துவிடுவார். ஒரு காட்சியில் நாகேஷ் வெள்ளைத்தாளில் பேனாவால் ஒரு புள்ளி வைத்துவிட்டு இது என்ன என்று கேட்பார். லட்சுமி கறுப்புப் புள்ளி என்பார். 

நாகேஷ், ஏன் இவ்வளவு வெள்ளை இருக்கிறதே இது கண்ணுக்குத் தெரியவில்லையா என்பார். எங்கேயோ படித்திருந்தேன். அதை அந்தப் படத்தில் பயன்படுத்தியிருந்தேன்.  அப்படித்தான். மனிதன் என்றால் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்யும்.  அதை நாம் பெரிதுபடுத்தக்கூடாது. ரஜினி, கமலிடம் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதைத்தான் நான் பார்க்கிறேன்” என்றார். 

இந்தக் கேள்வியை பாலசந்தர் எதிர்கொள்ளும்போது ரஜினி, கமல் இருவருமே பெரிய ஸ்டார்களாக உருவெடுத்துவிட்டார்கள். எனவே இருவரது இமேஜும் தன்னால் உடைந்துவிடக்கூடாது என்ற உயர்ந்த எண்ணம் பாலசந்தருக்கு இருந்தது. 

Prashantha Kumar

Leave a Reply