• Welcome to TamilsGuide
செய்திகள் 1

STF அதிகாரியின் உயிரைப் பறித்த மண்சரிவு

இலங்கை

பணியில் இருந்த வேளை மண்சரிவில் சிக்கி,  சிகிச்சை பெற்றுவந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரியொருவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை வலவ்வத்தை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய வடுகே தமித் நிஷாந்த பெர்ணான்டோ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ உப பிரிவில் கடமையாற்றி வந்துள்ள நிலையில்   கடந்த ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி அவர் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த அதிகாரி படுகாயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
 

Leave a Reply