யாழில் மாவாவுடன் இளைஞர்கள் கைது
இலங்கை
யாழ். கொக்குவில் பகுதியில் நேற்றைய தினம்(18) மாவா பாக்குடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த இளைஞர்களிடம் இருந்து 50 கிராம் அடங்கிய மாவா பாக்கு பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.