• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆண்கள் குறித்து வெளிப்படையாக பேசிய ரேகா நாயர்

சினிமா

பிரபல சீரியல் நடிகை ரேகா நாயர் அவ்வப்போது சச்சையான கருத்துக்களை கூறி பிரச்சனையில் சிக்குவதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார். ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒரு முறை என ஏதாவது ஒரு சர்ச்சையில் மூக்கை நுழைத்து தன்னுடைய கருத்தை பதிவு செய்து சர்ச்சையை கிளப்பி விடுவார் நடிகை ரேகா நாயர்.
  
அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் பெண்கள் கவர்ச்சியான ஆடைகளை அணிவதால் தான் ஆண்கள் ஈர்க்கப்படுகிறார்கள்.. தவறான செயல்களை நோக்கி தள்ளப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சமீப காலமாக அதிகமாக எழுதுவதை பார்க்க முடிகின்றது.

கவர்ச்சி என்று எதை கூறுகிறார்கள்.. அந்த காலத்தில் எல்லாம் மேலாடை அணியாமல் இருந்திருக்கிறார்கள் பெண்கள்.. இன்னும் கொஞ்சம் பின்னோக்கி சென்றால் ஆதாம் ஏவாள் என்ன ஆடை அணிந்திருந்தார்கள்..? என்று யாராவது கூற முடியுமா..? காட்டுவாசிகளாக இருந்தோம்.. இலை தலைகளை கட்டிக்கொண்டிருந்தோம்.

அதன் பிறகு புலித்தோல், மான் தோல் ஆகியவற்றை உடுத்திக் கொண்டு இருந்தோம். ஆனால் தற்பொழுது ஸ்லிம்லஸ் உடைய அணிவதைக்கூட கவர்ச்சி என்று கூறுகிறார்கள். நான் நடை பயிற்சி மேற்கொள்ளும் பொழுது குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தான் செல்கிறேன்.

ஏனென்றால் நடக்கும் பொழுது என்னுடைய முட்டி தேய்மானம் ஆகும். முட்டி வலிக்கும் எனவே நான் டவுசர் அணிந்து செல்கிறேன் அதேபோல ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ளக்கூடிய ஆண்களை கேட்டு பாருங்கள்.

அவர்கள் பனியன் அணிந்து கொண்டு ஓடினால் அவர்கள் நெஞ்சில் ரத்தம் வரும். நீங்கள் வேண்டுமென்றால் கேட்டு பாருங்கள். இப்படி அவரவர்களுக்கு ஏதுவான உடை அவர்கள் அணிந்து கொள்கிறார்கள்.

இதில் கவர்ச்சியாக நீங்கள் அந்த விஷயத்தை பார்த்து விட்டீர்கள்..? அதனால் தான் ஆண்கள் தவறான செயலை செய்ய தூண்டப்படுகிறார்கள் என்று கூறுவதெல்லாம் நியாயமற்றது என கூறியிருக்கிறார்.

இவருடைய அந்த பேச்சுக்கு ரசிகர்கள் பலரும் கலவையான விமர்சனங்களை பதிவு செய்து இருக்கின்றனர். உங்களுடைய கருத்து என்ன என்பதை தவறாமல் கமெண்ட் செக்சனில் பதிவு செய்யுங்கள். 
 

Leave a Reply