• Welcome to TamilsGuide
செய்திகள் 1

40 பெண்களை சமாளிக்க முடியும் - பப்லுவின் வக்கிர பேச்சு

சினிமா

இப்போது சோசியல் மீடியா செலிபிரிட்டி என்று பார்த்தால் அது பப்லு தான். எப்போதுமே வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என பேசும் இவர் தன்னைவிட 30 வயது குறைந்த பெண்ணை காதலிக்கிறேன், திருமணம் செய்ய போகிறேன் என்று பகிரங்கமாகவே கூறினார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இதெல்லாம் எத்தனை நாளைக்கு என்ற பேச்சும் எழுந்தது. அதற்கு பப்லு விதவிதமாக பதிலடி கொடுத்து தன் காதலியுடன் ஜாலியான வாழ்க்கையை நடத்தி வந்தார். ஆனால் இப்போது இந்த ஜோடி பிரிந்து இருக்கிறது.
  
இதுதான் இப்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு பப்லு வெளிப்படையாக பதில் கூறவில்லை. அதனாலேயே பயில்வான் உள்ளிட்ட சிலர் காதலியின் தேவையை இவர் பூர்த்தி செய்யாததால் தான் அவர் பிரிந்து சென்று விட்டார் என கூறி வருகின்றனர்.

இதனால் கடுப்பாள பப்லு என்கிட்ட என்ன இல்ல? நான் ஃபிட்டா தான் இருக்கேன். ஒன்னு இல்ல 40 பொண்ணுங்களோட தேவைய என்னால பூர்த்தி செய்ய முடியும் என முகம் சுளிக்கும் அளவுக்கு பேசியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் எனக்கு இதெல்லாம் பிரேக்ஃபஸ்ட் சாப்பிடுற மாதிரி.

எனக்கு தினமும் பொண்ணுங்க தேவை என அவர் பேசியிருப்பது இப்போது சர்ச்சையாக மாறி இருக்கிறது. என்னதான் வெளிப்படையாக இருந்தாலும் இப்படி ஒரு ஆணவ பேச்சு தான் பப்லுக்கான பின்னடைவாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசியது வக்கிரத்தின் உச்சம் என ரசிகர்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர். 
 

Leave a Reply