• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நெடுந்தீவில் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

இலங்கை

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , தமிழக மீனவர்கள் 14 பேர்  இலங்கைக் கடற்படையினரால் நேற்றைய தினம்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த மீனவர்களின் 3 படகுகளையும்  கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply