• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தெல்லிப்பளைத் தாக்குதலுக்கான காரணம் வெளியானது

இலங்கை

கடந்த 06 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாகவே  தெல்லிப்பளைத்  தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் உள்ள  இரு வன்முறை கும்பல்களுக்கு இடையில் நீண்ட காலமாக மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில்  குறித்த வன்முறை கும்பலைச் சேர்ந்த நபர் ஒருவர் மீது கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாகவே கடந்த திங்கட் கிழமை  தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்ற நபர் மீது மற்றைய வன்முறைக்  கும்பலைச் சேர்ந்தவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார் நேற்றைய தினம் முல்லைத்தீவு , புதுக்குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருந்த மூவரை கைது செய்ததுடன் தாக்குதலுக்குப் பயன்படுத்திய ஹயஸ் ரக வாகனம், 2 வாள்கள் என்பனவற்றையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply