• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பேலியகொட அதிவேக நெடுஞ்சாலையில் பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை

இலங்கை

பேலியகொட அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று இரவு கடமையில் ஈடுபட்டிருந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கொழும்பு வெளிவட்ட வீதியில் உள்ள பேலியகொட பரிமாற்று நிலையத்தில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தனது கடமை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

54 வயதான உப பொலிஸ் பரிசோதகரான ருவன் குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

நேற்று காலை 5 மணியளவில் தனது கடமைகளை முடித்துக் கொண்டு பேலியகொட பரிமாற்று நிலையத்திற்கு வந்த போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply