• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பெற்றோர் கண்டித்ததால் உயிரை மாய்த்த மாணவி

இலங்கை

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் குறைவான மதிப்பெண்கள் பெற்றமை குறித்து, பெற்றோர் கண்டித்ததால் மாணவியொருவர் உயிரிழந்த சம்பவம் யாழில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அராலி கிழக்கினைச் சேர்ந்த 17 வயதான மாணவியே நேற்றிரவு தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார்.

இந்நிலையில் பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply