கனேடிய மாநகராட்சி தேர்தல் வெற்றி குறித்து மனம் திறக்கும் பார்தி கந்தவேள்
கனடா
கனடாவின் ஸ்காப்ரோ தென் மேற்கு வட்டாரத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் வெற்றியீட்டிய பார்தி கந்தவேள், வெற்றி தொடர்பில் கருத்து;களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
கட்சி பேதமின்றி மக்கள் ஆதரவளித்தனர் எனவும் இதனாலேயே தமது வெற்றி சாத்தியமானது எனவும் புதிய பார்த்தி கந்தவேள் குறிப்பிட்டுள்ளார்.
நடைமுறைச் சாத்தியப்பாடுடைய தனித்துவமான நிர்வாகமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்காப்ரோ தென்மேற்கு வட்டார இடைத் தேர்தலில் பார்தி கந்தவேள் வெற்றியீட்டியுள்ளதாக நகர நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பர்தி கந்தேவேள் தேர்தலில் 4641 வாக்குகளை பெற்றுக்கொண்டதுடன், அரை எதிர்த்து போட்டியிட்ட சேம் ரூபசிங்க 3854 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.
ரொறன்ரோ பாடசாலைச் சபையின பொறுப்பாளர் பதவியில் பார்தி நீண்ட காலம் சேவையாற்றியுள்ளார்.
கட்சிசார் ஆதரவின் அடிப்படையில் அன்றி அனைத்து மக்களும் தமக்கு ஆதரவினை வழங்கினர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.