• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மற்ற பெண்களை பார்த்த காலதன் - கடும் கோபத்தில் காதலி செய்த கொடுஞ்செயல் 

மற்ற பெண்களை தொடர்ந்து பார்த்து வந்ததால் காதலன் கண்ணில் ஊசியை எடுத்து குத்திவிட்டு காதலி தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அமெரிக்காவில் 44 வயதான சந்த்ரா ஜிமினெஸ் என்ற பெண்மணி தனது காதலருடன் கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வருகிறார். காதலன் அடிக்கடி மற்ற பெண்களை பார்த்ததாக தெரிகிறது.

இவ்வாறான நிலையில், தாங்கள் வளர்க்கும் நாய்க்கு ஊசி போடுவதற்காக இரு வெறிநாய்க்கடி ஊசிகளை (rabies needles) வைத்துள்ளார்.

மற்ற பெண்களை காதலன் தொடர்ந்து பார்த்து வந்ததால் ஜிமினெஸ்க்கு கடும் கோபம் வந்துள்ளது. இதனால் ஒரு ஊசியை எடுத்து காதலனின் கண்ணில் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.

காயமடைந்த காதலன் பொலிஸாருக்கு போன் செய்து உதவி கேட்டுள்ளார். பொலிஸார் அவர்களது வீட்டிற்கு சென்று, காதலனை காப்பாற்றியதுடன், வீட்டிற்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் தூங்கிக் கொண்டிருந்த ஜிமினெஸை கைது செய்தனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது, ஆண் நண்பரின் கண்ணில் நான் ஊசியால் தாக்கவில்லை என்று குற்றத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த ஜிமினெஸ், காதலன் தன்னைத்தானே காயப்படுத்தி கொண்டார் எனத் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Leave a Reply