• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாடாளுமன்றத்தில் உரையாற்றியமைக்காக வழக்குத் தொடர முடியாது – சபாநாயகர்

இலங்கை

நாடாளுமன்றத்தில் உரையாற்றியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்காக அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நீதித்துறையை விமர்சனம் செய்தமைக்காக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு எதிராக நேற்று உயர் நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply