• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விபச்சாரத்தில் பிரபல நடிகைகள்: போலீஸில் சிக்கிய சங்கீதா

சினிமா

அப்பார்ட்மெண்ட் ஒன்றிற்கு அடிக்கடி விலை உயர்ந்த பைக்குகள் மற்றும் கார்களில் இளைஞர்கள் வந்து செல்வதாகவும் அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் எழுகிறது என ரகசிய புகார் வந்ததை தொடர்ந்து அந்த அபார்ட்மெண்ட் உள்ள பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் காவல் துறையினர். பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்கி, வாடிக்கையாளர்களை அழைப்பதை குற்றமாக்கும் சட்டத்தை நீக்கி, இந்த தொழிலை முறைப்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை பாலியல் தொழிலாளர்கள் காலம் காலமாக முன் வைத்து வருகின்றனர்.  

அதே சமயம், விபச்சார தொழிலையும் கை விடாமல் காசு பார்த்து வருகின்றனர். குறுகிய காலத்தில் கோடிகளில் செட்டில் செய்து விட தொழில் என்றால் யாருக்கு தான் கை விட மனசு வரும்.

அப்படி மனசு வராதவர்களை அவ்வப்போது தேடித்தேடி லபக்குவதையும் காவல் துறையினர் வாடிக்கையாக வைத்துள்ளனர். கடன் தொல்லை, குடும்ப சூழ்நிலை காரணமாக இப்படியான தொழில்களில் ஈடுபட்டு வரும் பெண்கள் எல்லாம் ஒரு பக்கம்.

தற்பொழுது ஆடம்பர வாழ்க்கை, சொகுசு வாகனங்கள், கைநிறைய காசு விரும்பிய உணவுகளை உண்ணுவதற்கு விலை உயர்ந்த ஆடைகளை அணிவதற்கும் என தங்களுடைய சுகபோக சொர்க்க வாழ்க்கைக்காக ஆசைப்பட்டு தங்களை தொலைக்கும் இளம் பெண்கள் ஏராளம்.

இப்படி இருக்கும் இளம் பெண்களை குறி வைத்து, அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறி, ஏற்கனவே இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் வாழ்க்கை முறை, அவர்களுடைய வாகனங்கள், ராஜபோக வாழ்க்கை என ஆசையை ஏற்றிவிட்டு அவர்களை சீரழிக்கும் கும்பல் தற்போது வரை உலா வந்து கொண்டுதான் இருக்கின்றன.

இவர்களின் முதல் குறி சினிமா, சீரியல் வாய்ப்பு தேடி அலையும் பெண்கள் தான். ஆடிசன் நடக்கும் இடங்களில் பணியாற்றக்கூடிய நபர்கள் மூலமா ஆடிஷனுக்கு வரும் பெண்களின் விபரங்களை சேகரித்து அவர்களை பின்தொடர்ந்து தங்களுடைய லாபத்திற்கு பயன்படுத்திக் கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

பட வாய்ப்பு கிடைக்காத நடிகைகள் ஒரு பக்கம் என்றால் படங்களில் நடித்து பிரபல நடிகையாகி தற்பொழுது மார்க்கெட் அவுட் ஆகி கைவசம் படம் ஏதும் இல்லாமல் இருக்கும் நடிகைகளும் இப்படியான விஷயங்களுக்கு தள்ளப்படுகிறார்கள்.

நடிகையாக இருந்த பொழுது லட்சங்களில் கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டு இருப்பார்கள். அப்பொழுது அவர்களுடைய வாழ்க்கை முறையே மாறி இருக்கும். ஒரு மாதத்திற்கு பத்து லட்சம் இல்லாமல் அவர்களால் அந்த மாதத்தை தள்ள முடியாது என்ற நிலை வந்திருக்கும்.

மாதம் ஒன்றுக்கு பத்து லட்சம் செலவு செய்து விட்டு திடீரென மாதத்திற்கு 30 ஆயிரம் 40 ஆயிரம் என்ற அளவில்தான் செலவு செய்ய முடியும் என்ற நிலையை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

இது அவர்களுக்கு மிகப்பெரிய தாழ்வு மனப்பான்மை மற்றும் மன அழுத்தம் போன்ற பாதிப்புகளை கொடுத்து பைத்தியம் பிடிக்க வைக்க கூடியது. ஆனால் வெகு சில நடிகைகள் மட்டுமே பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் பொழுதே நிரந்தரமான வருமானத்திற்கு வழி செய்து கொள்ளக்கூடிய நடிகைகளாக இருக்கிறார்கள்.

மற்றபடி பெரும்பாலான நடிகைகள் பணம் சம்பாதிக்கும் போது தங்களுடைய வாழ்க்கை முறையையே மாற்றிக்கொண்டு சுகபோக வாழ்க்கைக்கு அடிமையாகி விடுகிறார்கள். அதன் பிறகு அவர்களுடைய வாழ்க்கை தேவைக்கான வசதி என்பது அதிகமாகி விடுகிறது. எனவே அவர்கள் செலவு செய்ய வேண்டிய பணமும் அதிகமாகி விடுகிறது.

இதனால் விபச்சாரத்தில் ஈடுபட்டு கோடிகளை சேர்க்கும் நடிகைகள் இருக்கிறார். இப்படியான விவகாரங்கள் எல்லாம் வெளிநாடுகள், சொகுசு கப்பல்கள் அல்லது தனி தீவுகளில் தான் நடக்கும்.

சமீபத்தில், மும்பை பண்ணை வீட்டில் விபச்சாரத்தில் ஈடுபட்ட இரண்டு தமிழ் நடிகைகள் கூறிய ஸ்டேட்மெண்ட் தான் மேலே நீங்கள் படித்த விஷயம். சினிமா வாய்ப்புகள் இருந்த பொழுது எங்களுக்கு நிறைய பணம் கிடைத்தது. ஆனால் சினிமா வாய்ப்புகள் இல்லாத போது எங்களுக்கு பணம் கிடைக்கவில்லை. ஆனால் எங்களுடைய வாழ்க்கை தேவைக்கான பணத்தேவை குறையவில்லை. இதற்காக தான் விபச்சாரத்தில் தள்ளப்பட்டோம் என கூறியிருந்தனர்.

இந்நிலையில் சென்னையில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அமைந்தகரை அய்யாவு காலனி பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் ரகசியமாக விபச்சாரம் நடப்பதாகவும் குடும்பப் பெண்களை இங்கு அடைத்து வைத்து பாலியல் தொழிலில் தள்ளி பணம் சம்பாதிப்பதாகவும் விபச்சார தடுப்பு போலீஸ்சாருக்கு ரகசியமான தகவல் கிடைத்தது.

இந்த அப்பார்ட்மெண்டுக்கு சந்தேகத்திற்க்கிடமான வகையில் நிறைய இளைஞர்கள் விலை உயர்ந்த பைக்குகள் மற்றும் கார்களில் வந்து செல்வதாக அந்த பகுதி மக்களும் போலீசாருக்கு தகவல் கொடுத்து இருக்கின்றனர்.

இதையடுத்து அந்த பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த போலீசார் அந்த அப்பார்ட்மெண்ட் குறித்து விபச்சார தடுப்பு தனிப்பட்ட போலீசார் தகவல் தெரிவித்தனர். மஃப்டியில் வந்திருந்த போலீசார் அந்த அப்பார்ட்மெண்ட்டை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பார்ட்மெண்ட்க்குள் இளைஞர்கள் அடிக்கடி வந்து சென்றது உறுதியானது. அதற்கு பிறகு தான் சம்பந்தப்பட்ட வீட்டை போலீசார் முற்றுகையிட்டு அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனை நடத்தினர்.

அங்கே அடைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு அழகிகள் மற்றும் அங்கிருந்த இன்னொரு பெண்ணையும் கைது செய்திருக்கின்றனர். அடைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பெண்களை விசாரித்த பொழுது தங்களுடைய கண்ணீர் கதைகளை கூறியிருக்கின்றனர்.

அவர்கள் கூறியதாவது, எங்கள் இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் இருக்கிறார்கள். குடும்ப பாரத்தை சுமக்க வேலை தேடி வந்தோம்.. அப்போது பாலியல் தொழில் செய்யும் இவர்களிடம் சிக்கி விட்டோம்.

வேலை வாங்கித் தருவதாகவும், கைநிறைய சம்பளம் கிடைக்கும் சொகுசு வாழ்க்கை வாழலாம் என ஆசை காட்டி எங்களை இந்த தொழிலுக்கு அழைத்து வந்து விட்டார்கள். சென்னையில் இந்த அப்பார்ட்மெண்டுக்கு வரும் வரை தங்களுக்கு வேலை கிடைக்கும் என்று நம்பி வந்தோம்.

ஆனால், எங்களை மிரட்டி வீட்டில் அடைத்து வைத்த போதுதான் பாலியல் சமாச்சாரம் என்ற விஷயம் புரிந்துள்ளது. இதற்குப் பிறகு கஷ்டமர்களை எப்படி கவர வேண்டும்.. அவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.. எப்படியான விஷயங்கள் எல்லாம் அவர்களுக்காக செய்து கொடுக்க வேண்டும்.. என்று நேரடியாக அவர்கள் முன்பு ட்ரைனிங் கொடுத்தார்கள்.

மற்றொரு பக்கம் எங்கள் குடும்பத்திற்கு நாங்கள் நல்ல வேலையில் இருக்கிறோம் என்று செல்போனில் பேச சொல்லி நம்ப வைத்தார்கள். இங்கு வந்து மாட்டிக்கொண்ட நிலையில் தப்பித்துப் போக வழியே இல்லை என்று போலீசாரிடம் அந்த பெண்கள் கதறி அழுத்திருக்கிறார்கள்.

இறுதியில் இருவரையும் மீட்டு அரசு காப்பகத்தில் தங்க வைத்து இருக்கின்றனர். அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த குடும்பப் பெண்களை விபச்சாரத்தில் தள்ளி இதற்கு ட்ரெயினிங் தந்ததும் ஒரு பெண்தான் அவர் பெயர் சங்கீதா. வெறும் 28 வயதே ஆன இவர் திருவேற்காட்டை சேர்ந்தவர். பெண் புரோக்கர் சங்கீதா என்றால் அமைந்தகரையில் படு பேமஸ் என்கிறார்கள்.

இவருக்கு இன்னொரு நபரும் உதவியாக இருந்து வந்துள்ளார். அவர் அந்த நேரத்தில் அப்பார்ட்மெண்டில் இல்லாததால் எஸ்கேப் ஆகி இருக்கிறார். அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

சங்கீதாவின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். வேலை தேடி வரக்கூடிய அப்பாவி இளம் பெண்கள் சினிமா மற்றும் டிவி சீரியல் நடிக்க சான்ஸ் கேட்டு வருபவர்களும் தான் இது போன்ற விபரீதமான ஆட்களிடம் சிக்கிக் கொள்கிறார்கள்.

அதிலும் சிலர் வெளி மாநிலங்களில் இருந்து மாடல் அழகியாக இருந்து கொண்டு தமிழில் சீரியல் மற்றும் சினிமா வாய்ப்புகள் தேடி வருகிறார்கள். வந்த இடத்தில் ஊரும் தெரியாமல் பேரும் தெரியாமல் தவிக்கும் இவர்கள் வேறு வழியின்றி இப்படியான ஆசாமிகளிடம் சிக்கி தங்களை இழந்து விடுகிறார்கள்.

அடுக்குமாடி குடியிருப்புகள் பங்களா வீடுகள் மற்றும் தனியார் சொகுசு பங்களாக்கள் கிழக்கு கலாச்சாரையில் உள்ள ரிசார்டுகள் என பல இடங்களில் தங்க வைத்து அவர்களை கட்டாயப்படுத்தி சொற்பமான பணத்தையும் கொடுத்து விபச்சார தொழில் ஈடுபடுத்தி வரும் கும்பலை கட்டுப்படுத்தவும், கையும் களவுமாக பிடிக்கவும் இது தொடர்பான கண்காணிப்புகளை விரிவுபடுத்துவதாக போலீசார் நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர். 
 

Leave a Reply