• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில். இரட்டைக் குழந்தையைப் பிரசவித்த தாய் உயிரிழப்பு

இலங்கை

இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாய் ஒருவர் குழந்தை பிரசவித்து சில நாட்களிலேயே உயிரிழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் தொண்டமானாறு – வல்லை வீதியை சேர்ந்த நி. விதுசா எனும் 25 வயதான இளம் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சத்திர சிகிச்சை மூலம் இரட்டை குழந்தைகளைப்  பிரசவித்துள்ளார்.

இதனையடுத்து குழந்தை பிறந்து ஒரு சில நாட்களில் தாயும் சேய்களும் நலம் என வைத்தியசாலை நிர்வாகம் வீடு செல்ல அனுமதித்து இருந்தது.

இந்நிலையில் தாய்க்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டதை அடுத்து , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் என தெரிவிக்கப்படுகிறது.
 

Leave a Reply