கனடாவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
கனடா
கனடா நாட்டின் மனிடொபா மாகாணம் வினிப்பெக் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் மூவர் உயிர்ழந்துள்ளனர் . இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடைபெற்றது. அதிகாலை 4 மணியளவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு குறித்து பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 2 பேரை மீட்டனர்.
எனினும் , இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து படுகாயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்த பொலிசார், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவம் அங்கு பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.