• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிலரை நான் மனிதர்களாகவே மதிப்பதில்லை- மனிஷா அதிரடி

சினிமா

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் சீனுராமசாமி. இவர் பல படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் பத்திரிகையாளர் ஒருவர், இயக்குனர் சீனு ராமசாமி நடிகை மனிஷா யாதவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டினார். இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நடிகை மனிஷா யாதவ் தனக்கு நன்றி தெரிவித்த வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட இயக்குனர் சீனு ராமசாமி, மனிஷா யாதவ் தன் படத்தில் நடிப்பார் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து நடிகை மனிஷா யாதவ் இனி சீனு ராமசாமியுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த சர்ச்சை திரைத்துரையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேட்டி ஒன்றில் மனிஷா யாதவ் கூறியதாவது, "கடந்த வாரம் சீனு ராமசாமியின் ஆபீசில் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. ஒரு புதிய படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் இருப்பதாக சொல்லப்பட்டது. எனக்கு அது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

'இடம் பொருள் ஏவல்' படப்பிடிப்பின்போது அவர் என்னை நடத்திய விதத்தின் அடிப்படையிலும், அவர் என்னை அப்படத்தில் இருந்து நீக்கியதாலும் இனி அவருடைய படத்தில் நடிக்க விரும்பவில்லை. இது எல்லாவற்றுக்கும் காரணம் நான் அவரிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளவில்லை என்பதும், அவர் செய்த எல்லாவற்றுக்கும் ஒத்துழைக்கவில்லை என்பதும்தான்.

இந்த விஷயம் என்னை மிகவும் பாதித்ததால் அது குறித்து நான் யாரிடமும் பேசகூட விரும்பவில்லை. எனக்கு நடிப்பு வரவில்லை என்று அவர் துறையில் இருக்கும் அனைவரிடமும் கூறிவிட்டார் என்று நினைக்கிறேன். 'ஒரு குப்பை கதை' பட விழா மேடையில் நான் அனைவருக்குமே நன்றி சொன்னதால் அவருக்கும் சேர்த்து நன்றி சொன்னேன்.

நல்ல மனம் கொண்ட பெரிய இயக்குனர்களிடம் நான் பணியாற்றியிருக்கிறேன். திறமையானவர்களாக இருந்தும் தார்மீக உணர்வு இல்லாதவர்களை நான் மனிதர்களாகவே மதிப்பதில்லை" என்று கூறினார்.
 

Leave a Reply