• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எனது உயிருக்கு ஜனாதிபதியே பொறுப்பு - அமைச்சர் ரொஷான் ரணசிங்க

இலங்கை

தனது உயிருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு ஜனாதிபதியும் சாகல ரத்நாயக்கவும் பொறுப்பு கூற வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் ஒன்றியத்திற்கு சென்று கூறுகின்றார் ஊழல் மோசடிகளை ஒழிக்க வேண்டும் என்று.

அதற்காக செயற்படுகின்ற என்னை வேறு விதமாக சித்தரிக்க முயற்சிக்கின்றார்கள்.

பணம் கொடுத்து என்னை கொலை செய்ய முயற்சிப்பார்கள்.

அவ்வாறு இல்லையெனின் போதைபொருள் கடத்தல்காரராக சித்திரிக்க முயற்சிப்பார்கள்.

ஒரு அமைச்சராக உள்ள என்னுடைய பாதுகாப்பில் அரசியல் மற்றும் நீதித்துறையின் தலையீடுகள் தொடர்பில் நான் கவலையடைகின்றேன்.

இது அரசியலில் ஒரு புதிய பிளவாக இருக்க வேண்டும். அதில் என் உயிர் போய்விடலாம். நான் நெடுஞ்சாலையில் கொல்லப்படலாம்.

அது நாளையா, இன்றோ அல்லது நாளை மறுநாளோ என்று எனக்குத் தெரியவில்லை. ஜனாதிபதி மற்றும் அதற்கு சாகல ரத்நாயக்க பொறுப்பேற்க வேண்டும்.

ஆனால் இந்த 134 வாக்குகளை அவருக்கு அளித்தது அவர் ஜனாதிபதியாகி எம்மைப் பழிவாங்குவதற்காகவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எனக்கு வாழ்வதற்கான உரிமையை பெற்றுத் தாருங்கள். வேறு நாடுகளுக்கு அடைக்கலம் கோரி செல்ல நான் தயாராக இல்லை.

கிரிகெட் பிரச்சினை தற்போது முடிவடையவில்லை என்றால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக இந்த பிரச்சினையை முடிப்பேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply