• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெள்ள நீரில் மூழ்கிய இலங்கையின் மிகவும் புகழ் பெற்ற கோயில்

கொட்டித்தீர்த்த கனமழையால் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரை தலமான செல்ல கதிர்காமம் கோயில் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கதிர்காமத்தில் தொடர்ச்சியான பெய்துவரும் மழை காரணமாக செல்லக்கதிர்காமம் தற்போது நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ள நிலையிலேயே ஆலயம் நிரீல் மூழ்கியுள்ளது.

மேலும் தென் மாகாணத்தின் பிரசித்திப் பெற்ற வழிப்பாட்டுத் தலமாக செல்லக்கதிர்காமம் காணப்படுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கோயிலின் நாளாந்த நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கதிர்காமம் முருகன் கோயிலின் நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மேலும், ஆலயத்திற்கு வருகைத் தரும் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

Leave a Reply