• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இணையவாசிகளை உருக வைத்த கொரியச் சிறுவன்

 தென் கொரியச் சிறுவன் ஒருவன் இணையவாசிகள் பலரின் மனத்தில் இடம்பிடித்துள்ளான். ‘My Golden Kids' எனும் கொரிய நிகழ்ச்சியில் அந்தச் சிறுவனும் அவனது பெற்றோரும் கலந்துகொண்டனர்.

அந்த நிகழ்ச்சி பிள்ளைப் பராமரிப்பில் பெற்றோரின் சவால்களை எடுத்துக்கூறுகிறது.

"உனக்கு அப்பாவைப் பிடிக்குமா? அம்மாவைப் பிடிக்குமா?" என்று சிறுவனிடம் கேட்டதற்குத் தமக்குப் பதில் தெரியவில்லையே என்றான் அந்த சிறுவன். ஏனெனில் பெரும்பாலும் வீட்டில் தாம் தனியாக இருப்பதாகவும் கூட விளையாட யாரும் இல்லை என்றும் அவன் வருந்தினான்.

"அப்பா ஆத்திரப்பட்டால் பயமாக இருக்கும். அவர் என்னைக் கனிவாக அழைத்தால் நன்றாக இருக்கும். அம்மாவுக்கும் என்னைப் பிடிக்கவில்லை என்றே நினைக்கிறேன்," என கூறி சிறுவன் கண்ணீர் வடித்தான்.

அந்தக் காணொளியைக் கண்ட சிறுவனின் பெற்றோர் கண் கலங்கியதுடன், காணொளியைப் பார்த்தவர்களில் சிலர் சிறுவனின் மனப்பக்குவத்தைப் பாராட்டினர். சிறுவன் கண்னீவிடும் காணொளி சமூகவலைத்தளங்களில் வரைரலாகி வருகின்றது.   
 

Leave a Reply