• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில். திடீரெனப் பற்றியெரிந்த வான்! உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை

வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சிறிய ரக வான் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த தீயினை அணைக்க முயன்ற வானின் உரிமையாளரும் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை சேவையில் ஈடுபட்டு வந்த வானே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக  நெல்லியடிப்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply