மடிக் கணினிகள் வழங்கி வைக்கப்பட்டது..
இலங்கை
தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தான தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களால்,
துர்க்கா தேவி மகளிர் இல்லத்தில் இருந்து கல்வி கற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகளிற்கு அவர்களின் கல்வித் தேவையினை பூர்த்தி செய்யும் நோக்கில்,
மடிக் கணினிகள் வழங்கி வைக்கப்பட்டது.
தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானம் ஆற்றி வரும் பல்வேறு சமூக நற்பணிகளில் மகளிர் இல்லமும் ஒன்றாகும்.
இங்கு கல்வி கற்ற பிள்ளைகள் பலர் தற்பொழுது பல துறைகளில் மிகச் சிறந்த ஆழுமை மிக்கவர்களாக இருந்து வருகின்றனர் அத்துடன் தனிமனி ஒழுக்கத்திலும் ஆன்மீகத்திலும் மிகச் சிறந்த பிள்ளைகளாக இருந்து வருகின்றனர்.
இங்கு கல்வி கற்று பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்படும் மாணவிகளுக்கு அவர்களின் கற்றல் செயற்பாட்டிற்காக மடிக் கணினிகள் வழங்கி வைக்கப்படுவது இயல்பான நடைமுறையாகும்,
அதன் அடிப்படையயில் இந்த மாணவிகளிற்கு மடிக் கணினிகளை தேவஸ்தானத்தின் தலைவர் வழங்கி வைத்து மாணவிகளின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.