• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஷம்மி சில்வா மற்றும் சுதத் சந்திரசேகரவால் அச்சுறுத்தல் – அமைச்சர் ரொஷான் ரணசிங்க

இலங்கை

ஷம்மி சில்வா மற்றும் சுதத் சந்திரசேகரவிடம் இருந்து தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியல் வரலாற்றில் அமைச்சர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவது இதுவே முதல் தடவை என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே தனது பாதுகாப்பை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடமும் பாதுகாப்புப் படையினரிடமும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய விளையாட்டுகாளில் உள்ள ஊழலை தடுப்பதே தனது நோக்கம் என்றும் இந்த அச்சுறுத்தல்கள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
 

Leave a Reply